பொறுப்பான அரசபதவியில் இருந்தாலும் பணிகளுக்கிடையில் இயற்கையை நேசிப்பதும் நேசித்தவற்றை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்துவதும் சுயாந்தனது பணிகளில் ஒன்றாகின்றது. இயற்கையையும் தன்னைச்சூழ உள்ளவர்களையும் நேசிப்பவன் ஒருவனில் மட்டுமே மனிதநேயமும் சகோதரத்துவமும் தன்பாட்டில் விளையும். இளைய வயதிலேயே சிறந்த விமர்சகராகவும் எழுத்தாளராகவும் தேர்ந்த வாசகராகவும் இருக்கின்ற சுயாந்தனது மறுபக்கம் இயற்கையை ஒளிப்படம் செய்வதாகும். கலைக்கூடம் பகுதிக்காக நாம் அவரை அணுகியபொழுது அவர் சேகரித்த தாயகத்துப் புள்ளினங்களின் தொகுப்பை எமது பார்வைக்கு அனுப்பி இருந்தார். இதே போல் அவர் மேலும் வளரவேண்டும் என்பதே எமது விருப்பமுமாகும்.
நடு குழுமம்
000000000000000000000000000000