வழமைபோல் நாய்கள் ஊளையிட்டுக்கொண்டேஇருந்தன
சாவுக்கருகில் நாங்கள்
இருப்பை உணர்த்திக்கொள்ள
அணைத்துக்கொண்டோம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
முன்னெப்போதுமில்லாதவாறு
உயிர்களின் பயணம்
காற்றையும் கறுப்பாக்கியிருந்தது
புழுதியடங்கி
செம்மண் சேறாகியிருந்தது
குருதியில்
நீ சொல்கிறாய்
செத்தால் தெரியப்போவதில்லையே
இதெல்லாமென்று
இருவரும் அழமுயற்சிசெய்தோம்
முடியாமல்
அணைப்பை இறுக்கிக் கொண்டோம்
உன் அணைப்பு வழுகியது
இழுத்துப்பிடித்தேன்
இரவை அறுத்துவந்த காலன்
உன்னையுமந்தான் அறுத்தான்
அழுத்துகொண்டே உன்னை அந்தரத்தில் விட்டுவந்தேன்
நான்
அகதியாய் சிங்களத்தின் கையில்
மீண்டும்
யார் மீட்பார் உன்னைப்போல்
என்னை?
00000000000000000000
பொதுக்கழிப்பறை
பொதுக்கழிப்பறை என்ற
இடத்தில்
இந்து
முஸ்லீம்
கிறிஸ்தவர்
என்று
எல்லோரும்
வருசையாக நின்றார்கள்
ஒண்டுக்கோ
இரண்டுக்கோ
ஒருவன் பின்
மற்றயவன் போகவேண்டும் என்ற நிபந்தனையில்
ஐம்பது சென்டிம் அறவிடப்படுக்கொண்டிருந்தது
திடீர் என்று பொறுப்பாளர்
சேவை சில நிமிடம் நிறுத்தம்
என்ற
பதாதை வைத்தார்
நின்றவர்கள் திகைத்துப்போனார்கள்
அவரவர் தெய்வங்களை அழைத்தார்கள்
ஒருவன் வந்தான்
அடைப்பெடுத்தான்
சேவை தொடர்ந்தது
அனைவரும்
ஆண்டாவா காப்பாற்றி விட்டாய்
எங்கள் மானத்தை
என்றார்கள்
அடைப்பெடுத்தவன்
இதுவும் கடந்துபோகும் என்று
அடுத்த கழிப்பறைக்கு கடவுளானான்.
ப.பார்தீ – பிரான்ஸ்