வவுனியாவில் தற்பொழுது வசித்து வரும் அனோஜன் சந்திரசேகர் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கட்புலக்கலை மாணவராகப் பயின்ற பட்டதாரியாவார். இவரது ஓவியங்கள் போருக்குப் பின்னரான காலங்களை சொல்லி நிற்பதில் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
கடந்த 10 மார்கழி 2017-ல் இவரது ஓவியக்கண்காட்சி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் எமது இணைய சிற்றிதழுக்கு ஓவியராகவும் அட்டைப்பட வடிவமைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் அனோஜன் நடுவுக்காக வரைந்த ஓவியங்களாகும். இந்த வருடத்தில் அனோஜன் தமிழகத்து பிரபல எழுத்தாளராகிய அண்டனுர் சுரா எழுதிய ‘அப்பலோ’ நாவலுக்கு அட்டைப்பட வடிவமைப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
00000000000000000000000