என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் :
வணக்கம் வாசகர்களே!
Colombo institute of research and psychology-ல் எனது மனோதத்துவத் துறையில் உயர் கல்விமானியை படித்து விட்டு இப்பொழுது சுயாதீன ஆய்வாளராகக் (independent researcher ) கடமையாற்றும் எனக்கு வர்ணங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. சிறு வயதிலிருந்து வரைதலிலும் வர்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் அதிகம். கற்பனை விம்பங்களை வரைதல், வரைதல் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தல், போன்ற செயற்பாடுகள் வரைதலை ஓர் அன்றாட செயலாக்கியது. உதாரணமாக எனது நாட்குறிப்பேடு ஒரு (Art journal) போல இருக்கும். எனது துறை உளவியல் (psychology)ஆக இருக்கும் பட்சத்தில் depression மற்றும் அது சார்ந்த கோளாறுகளுக்கு Art-therapy ஒரு முக்கியமான குணப்படுத்தும் செயல்முறையாக இருக்கின்றது. தனிப் பட்ட ரீதியில் இவ்வாறு வரைதலில் ஈடுபட ப் பல காரணங்கள் இருக்கின்றன.
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்
0000000000000000000000000000000
ஓவியத்தைச் சொல்லல் :
இந்த அண்டம் தாயிற்கு ஒப்பானது. அது தன் முந்தானையில் ஊஞ்சல் கட்டி எம்மை மகிழ்விக்கிறது.
0000000000000000000000000000000
ஓவியத்தைச் சொல்லல் :
நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இசையுள்ளது. அது கேட்பதற்கு மட்டுமல்ல உணர்வதற்கானது.
0000000000000000000000000000000
ஓவியத்தைச் சொல்லல் :
அவள் இசைப்பதற்கேற்ப்ப அண்டத்தின் அணுக்கள் அடுக்கப்படுகின்றன.
0000000000000000000000000000000
ஓவியத்தைச் சொல்லல் :
காலத்தை இரைமீட்டல் என்பது ஒரு கலை; அதில் மூழ்கித்திழைத்தல் என்பது அவ் நினைவுகளுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம்.
0000000000000000000000000000000
ஓவியத்தைச் சொல்லல் :
மனிதனின் செயற்கை ஒரு போதும் இயற்கையின் சமநிலையைப் பேணப் போவதில்லை. இதுவரை நாம் கண்ட இயற்கை அனர்த்தங்களாவன. அது நம்முடன் ஆடிய சதுரங்க வேட்டையே ஆகும்.
0000000000000000000000000000000
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்-இலங்கை