பனடோல்-சிறுகதை-டிஷாந்த் சிவகுமாரன்

 

டிஷாந்த் சிவகுமாரன்முற்குறிப்பு :-

01. இந்தக் கதை எங்கோ ஒரு ஊரில் எங்கோ ஒரு மூலையில் விரியும் கதை இல்லை. இதன் உப கூறுகள் ஒவ்வொன்றும் எம்மைச் சுற்றியே புனையப்பட்டவை.
02. இந்த உயிருள்ள சம்பவத்தில் புனையப்படும் பெயர்கள் அனைத்தும் உயிரற்றவை.

00000000000000000000000000

சம்பவம்: – 01

யமுனா – அசோக்:-

-Hey
-Hai
-Dalu…………….
Y u r not Replying me………..?
-………………..
-……………….
-R u angry with me …………..?
– Who is Janu ?
-Y…….?
-En ne ava photova like pannina ?
-Aei
-Chellam
-En Neduka ennoda sandai poduta? Aval school Friend da……….
-Unakku naan seththa ninmathinda naan sakitan……..
– De……………. otu photokku like pannurathu kuttama…………..?

சம்பவம் – 02

சமீர:-

சமீரவின் கதை சற்று வித்தியாசமானது. 14 வயது நிரம்பிய சிறுவன். வீட்டுக்கு மூத்த பிள்ளை. தங்தை கணித ஆசிரியர் அன்பானவர் கண்டிப்பவர். எவ்வளவு படித்தும் அவனுடைய 1350ப மூளையினால் அட்சர கணிதங்களையோ நிறுவல்களையோ விளங்கிக் கொள்ள முடியவில்லை. புதிதாகப் புகுந்த தொடை புதிய பிரச்சனை அவனுக்கு. தந்தை கண்டிப்பானவர். கடந்த தவணைக் கணித புள்ளிகள் குறைவடைந்ததால் கடுமையாக நடந்து கொண்டார். தான் கணித ஆசிரியர் தனது மகன் 40 புள்ளி எடுப்பதா எண்டு சினந்து கொண்டார். அவனுக்குப் புரியாத சூனியத்தொடைகளைப் புரிய வைக்கவோ அட்சர கணிதங்களின் சூத்திரங்களைத் தெளிவாக்கவோ அவர் முயலவில்லை .

கணிதப் பரீட்சை முடிந்து வந்த சமீர சற்றுச் சோர்வாகவே இருந்தான். கடந்த சில நாட்களாய் அவனால் சரியாகத் தூங்க முடியவில்லை. தந்தை கவனிக்கவில்லை. தாய் பிள்ளை படிக்கிறான் எண்டு மகிழ்ச்சியில் இருந்தாள். இருந்தாலும் ஏதோ உறுத்தியவாறு இருந்தது அவளுக்கு. சீனி வாங்கப்பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்றவள் 8 மணி சீரியல் பத்தி கதைச்சு கொண்டிருக்க………

“இப்ப தான் பொடியன் 4 பனடோல் காட் வாங்கிட்டுப் போறான்….”. பின்னாலேயே நீங்களும் வாறிங்களா என்றான்.

சம்பவம் – 03

முஸ்தபா:-

வீட்டுக்கு ஒரே பிள்ளை வயது 16. க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகள் நடந்தவாறு உள்ளது.

-Dada……….சல்லி தாங்க 200 Rs.
– ஏன்டா……???
– போனுக்கு ரீலோட் போடணும்.
– மவன் சும்மா விளையாடாத. விடிஞ்சா Science Exam போய் படிக்கிற வேலையைப் பாரு…
– இப்போ தரப்போறிங்களா இல்லையா வாப்பா ………..
– உனக்கு செல்லம் கூடிட்டு Exam Pass பண்ணாட்டி பண்ணி தான் மேய்க்கணும்.
– புள்ள கேக்கிறான் இல்ல குடுங்களன். இந்தா நான் தாறன்.
– உள்ளபோடி.. நீ தான் அவனை கெடுக்கிறது. நாளைக்குப் படிக்காம பண்ணி மேய்க்கப் போறான் பாரு..
– நான் பண்ணி மேய்க்கப் போறானா…?
– ஓம்டா… Exam Pass பண்ணாட்டி பண்ணிதான் மேய்ப்ப.

அவன் உம்மா வஞ்சிக்கப்பட்டதையும் தான் பண்ணி மேய்க்க போறன் என்பதையும் அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விறுவிறு எண்டு மாடி படி ஏறி சென்றவன் கதவை அடித்தச் சாத்திக்கொண்டான்.

சம்பவம் 04

திலினி – ரணவக்க:-

திலினி – ரணவக்க பள்ளிப் பருவத்தில் இருந்து காதலர்கள். ரணவக்க திலினி மீது உயிரை வைத்திருந்தான். திலினியும் தான். இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமண ஒழுங்குகளும் நடந்தவாறு இருந்தன. ரணவக்க தாயின் மீது அளவுகடந்த பாசம் உடயவனாய் இருந்தான். எதையும் தாயிடம் சொல்லாமல் செய்ய மாட்டான். திலினியைக் காதலிப்பதையும் தாயிடமே முதலில் சொன்னான்.

தாயிடம் அனுமதி பெற்ற பின்பே திலினியிடம் தான் முதலில் தான் உன்னைக் காதலிக்கின்றேன் என்று தெரிவித்தான். திலினி இது குறித்து பொறாமை கொண்டவளாகவே இருந்தாள்.

”இதெல்லாம் சரிவராது. நாளைக்கு நீ நில்லு என்டா நிக்கணும் இரு என்டால் இருக்கணும் நான் எப்புடி உன் அப்பாவை வைச்சுக்கின்றன் அதே போல நீயும் இருக்கணும் ” என்ற திலினியின் தாயின் அறிவுரைக்கு இணங்க அவள் ரணவக்கவின் அன்பை சோதிக்கத் தொடங்கினாள்.

வலிந்த ஒரு சண்டையை உருவாக்கி கொண்டு, 4 பனடோல்களை உட்கொண்டுவிட்டு தாயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.

கதை சொல்லி:-

சம்பவங்கள் யாவும் கதை சொல்லியை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள். கதை சொல்லி 27 வயது நிரம்பிய இளைஞன். மருத்துவ விடதியில் Intern Medical Officer . 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் அவன் வாழ்வு அந்த விடுதியைச் சுற்றியே பின்னப்பட்டதாய் இருந்தது. கழிந்து போன கடின இரவால் அவன் மனதளவாலும் உடலளவாலும் சோர்ந்திருந்தான். அவன் கண்கள் விடிந்தும் விடியாமல் பாதி தூக்கத்தில் இருந்தவாறே காணப்பட்டன.

-” Good Morning docter”.

வழமையான அதே செந்தழிப்பான முகத்துடன் அந்த விடுதி பிரதான தாதி அவனை வரவேற்றாள். அவனுக்கு அவள் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம் அவள் அம்மா நினைவுக்கு வருவாள். அவள் சிரிப்பும் கவனிப்பும் மட்டுமே அவனை நகர்த்திக் கொண்டிருந்தது.

– Good Morning Sister.

– Docter 4 அட்மினும் இருக்கு ..

– 4ஆ…??

– ம்ம்;… 4லும் பனடோல் Poisioning

– ஐயோ… காலங்காத்தால Poisioning ஆ….

2 பனடோல் தாங்க சிஸ்டர் தலை இடிக்குது.

பனடோல் சொல்லும் கதை:-

Generic name: Paracetamol
Trade Name: Panadol , Tylenon எண்டெல்லாம் என் பேரச் சொன்னால் உங்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டு ஓடுவீங்க. ஆகவே பனடோல் என்றே ஆரம்பிக்கிறேன். அமெரிக்காவின் எங்கோ ஒரு மாநிலத்தில் 1890 களின் பிற்பகுதியில் நான் உருவாக்கப்பட்டேன். 1950 களின் பிற் பகுதியில் சகலர் கைகளிலும் இலகுவாக புழக்கத்திற்கு வந்தேன். தீங்கினை விளைவிக்காத சிறந்த மலிவான வலி நிவாரணி நான். நான் என்று நினைக்கும் போதெல்லாம் அஃறினையான எனக்கு பெருமையும் திமிரும் அதிகமாக இருப்பதைப் போல் உணர்கின்றேன்.

ஏன் இருக்கத்தானே வேணும்….??

இந்தக் கதையின் தலைப்பானது கூட எனக்கு இன்னமும் பெருமையாக உள்ளது.

என்னை வாங்குவதற்கு வைத்தியர்களின் சிபாரிசு சிட்டை தேவையில்லை. இலகுவாக பெரிய பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய பார்மசிகள் வரை என்னைப் பெற்றுக்கொள்ளலாம். நான் உணவுக் கால்வாய் அகத்துறிஞ்சப்பட்டு ஈரலால் நச்சுருக்கப் படுகிறேன். நான் உருவாக்கும் NAPQI எனும் நச்சுப் பதார்த்தம், ஈரலினால் உருவாக்கப்படும் GLUTHAIONE ஆல் நச்சு நீக்கப்படுகின்றேன்.

இடை குறிப்பு:-

பனடோல்கள் பாவித்து தற்கொலை முயற்சித்து கருட புராணத்தில் விபரிக்க மறந்த இன்னுமொரு தண்டனை அதன் விளைவுகள் அவ்வளவு பாரதூரமானவை !!!

ஈரல்கள் சொல்லும் கதை:-

1. யமுனாவின் ஈரல்:-

யமுனா 40 பனடோல்களை உட்கொண்டாள். உட்கொண்ட உடனே மரண பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. தாயிடம் சொன்னாள். அரக்க பரக்க பாய்ந்தடித்தும் 30 நிமிடங்களுக்குள்ளேயே வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டாள். கதை சொல்லியின் உத்தரவுக்கு அமைய அவளுக்கு வாந்தியை உண்டாக்கும் மருந்து கொடுக்கப்பட்டது.

அவள் பெருகுடல் சிறுகுடல் ஊடு சிறுத்து வாய்வழி வெளிவரும்படி வாந்தி எடுத்தாள். அவள் உட்கொண்ட பனடோல்களில் மிகச் சொற்ப அளவே அகத்துறுஞ்சப்பட்டது. மீளவும் அவளுக்கு Activated Charchol குடுக்கப்பட்டது. அது இரப்பையை தாண்டி சிறுகுடலில் புகுந்த பனடோலின் அகத்துறுஞ்சலைக் குறைவடையச் செய்தது.

நானும் தயாரகவே இருந்தேன். யமுனா ஆரோக்கிமானவள். எந்தவித பாலியல் நோய்களுக்கும் உட்படாதவள். அவள் நீர்ப்பீடன சக்தி திடமாகவே இருந்தது. ஆகவே நானும் வலிமையானவனாகவே இருந்தேன். அந்த NAPQI அளவினை நச்சு நீக்குவதற்கு எனக்கு மிகவும் குறைவான அளவு GULTHAIONE தேவைப்பட்டது. அதிகளவு GULTHAIONE உருவாக்குமாறு மேலும் எனது தொழிற்படு அலகுகளுக்கு உத்தரவிட்டேன்.

02. திலினியின் ஈரல்:-

நான் அதிகளவு எனது கதையைச் சொல்லத் தேவையில்லை. திலினி உட்கொண்ட அளவை நான் பொருட்படுத்தவே இல்லை. என்னிடம் போதியளவான GULTHAIONE இன்னமும் இருந்தன.

3. முஸ்தபாவின் ஈரல்:-

முஸ்தபா 20 PANDOL களை உட்கொண்டிருந்தான் மரண பயம் தொற்றிக் கொண்டாலும் அவன் தான் அவமதிக்கப்பட்டதை நினைத்து வருந்தினான். தாயார் அவனை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 4 மணித்தியாலங்கள் கடந்திருந்தன. அவன் உட்கொண்ட பனடோல்கள் அனைத்தும் அகத்துறுஞ்சப்பட்டு எனது வேலைப் பழு அதிகரித்திருந்தது. கைவசம் இருந்த GULTHAIONE எல்லாம் தீர்ந்த நிலையில் நான் களைப்புற்று இருந்தேன். எனது தொழிற்படு அலகுகள் சில NAPQIஆல் உருவாக்கப்படும் FREE RADICAL இனால் பாதிக்கப்பட்டு இறப்பதை நான் பார்த்தக்கொண்டிருந்தேன்.

கதை சொல்லி மிக துரிதமாகச் செயற்பட்டான். முஸ்தப்பாவின் குருதி மாதிரிகள் சோதிக்கப்பட்டன. குருதியில் உள்ள பனடோல் செறிவு அளக்கப்பட்டன. அவன் உள்ளுணர்வு இது TOXIC ஆ எண்டு அறிவுறுத்த அறிவுறுத்த, அவன் தெளிவாகவும் நிதானமனகவும் செயற்பட்டான். முஸ்தப்பாவின் உடல் நிறை அளக்கப்பட்டது. ஏதோ புத்தகங்களை எல்லாம் தட்டினான். வரைபு ஒன்றைத் தேடினான்.

“Miss Toxic Dose NAC Infusion Ready பண்ணுங்க…” என்ற அந்த சத்தத்தைக் கேட்டதும் நான் புதுப் பொலிவுற்றேன்.

NAC அல்லது N-Acetyl Cysteine.

N-Acetyl Cysteine Gluthaione ஐ உருவாக்கும் ஒரு மூலப் பொருள். அது கிடைத்தும் என் தொழிற்பாட்டு அலகுகளை நான் பாதுகாத்துக் கொண்டேன்.

4. சமீரவின் ஈரல்:-

சமீரா மயக்கமுற்ற நிலையில் தந்தையாரால் அவதானிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பொழுது மணித்தியாலங்கள் 6 கடந்திருந்தன. அவன் அருகே கிடந்த உடைக்கப்பட்ட பனடோல் பைக்கற்றுக்கள் 4 உம் SORRY DADY என்ற கடிதமும் அவரை பதைக்க வைத்தது. விடுதியில் இருந்தும் அவர் புத்தா…. புத்தா…. என்று அழுதவாறே இருந்தார்.

நான் தொழிற்பாடு முற்றும் இழந்த நிலையில் காணப்பட்டேன். எனக்கு சற்று நினைவு தெரியும் போது அந்தக் குளிரை என்னால் உணர முடிந்தது. என்னை சுற்றிய அவதானிப்பு கருவிகளின் பீப்…..பீப்…. சத்தங்களை என்னால் நன்றாக கேட்க முடிந்திருந்தது. கதை சொல்லி சமீராவை ICU இல் சேர்த்திருக்க வேண்டும். நான் இப்போது ICU இல் இருக்கின்றேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

எனது சகாக்களின் நலன்களை விசாரிக்க ஆரம்பித்தேன். நுரையீரல்களும் இதயமும் தொழிற்படு நிலையிலேயே இருந்தன. சிறுநீரகம் சற்றுக் களைப்பற்று இருந்தது. இப்போது நான் செய்ய வேண்டிய சில வேலைகளையும் அவன் சேர்த்து செய்து கொண்டிருந்தான்.

என்னால் தொற்று நீக்கப்பட வேண்டிய அமோனியா சமீரவின் மூளையினைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடத் தொடங்கினேன்.

முடிவுரை

மணித்தியாலச் செய்திகள்:-

1. காதலியின் தற்கொலை முயற்சியால் மனமுடைந்த இளைஞன் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அவர் வீட்டில் மீட்டெடுக்கப்பட்டார். விடுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் யமுனா – அசோக் பொறுமையாகப் பேசி சுமூகமாகப் பிரிந்து கொண்டார்கள். அசோக் மேற்படிப்பக்காக வெளிநாடு செல்ல இருக்கிறான். யமுனா தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.

MO/ Psychiatry
Dr Doctor,
This 16 years old boy presented with self ingestion of 20 PCM tablets following a quarrel with parents. Plz be kind enough to see this pt and do needful.
Thank you
Dr Balachchanthiran

0000000000000000000

IMO/Medical ward 16
Dear Doctor,
This child need inward treatment plz be kind enough to transfer this pt ward 20 once your management finish.
Thank you
Dr Thivaakaran

00000000000000000000

MO/ OPD
Plz be kind enough to transfer this pt to ward 20 for further management.
Thank you
Dr Balachchanthiran

000000000000000000

2. சிகிச்சை முடிந்து வெளியேறிய முஸ்தபா பல் இடுக்குகளில் படிந்த கறுப்பு நிற கரியை நினைத்துப் பெரிதும் வருந்தினான். பின் அவன் பல் வைத்தியரைச் சந்தித்ததாகவும் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் பல் வைத்திய நண்பர்கள் சொல்லி கதை சொல்லி தெரிந்து கொண்டான்.

3. சமீரா தாய் தந்தையரின் அரவணைப்பால் இலகுவில் குணமடைந்தான். இருந்தாலும் அவனும் அவன் பெற்றோர்கள் தனித்தனியே counseling க்கு அனுப்பப்பட்டார்கள். கூட்டாகவும் counseling செய்யப்பட்டார்கள்.

5 நாட்கள் கழித்து கதை சொல்லி ஒரு பரிசு கொடுத்தான். அதை திறந்து பார்த்த சமீர அதிர்ச்சியடைந்தான்.

– “அண்ணே…!!! விளையாடாதீங்க உங்களுக்கும் 40 ஏ கணிதத்துக்கு….”
– “வேணும் எண்டா என் அம்மாக்கும் maths teacher க்கும் PHONE பண்ணி தாறன் கதை..”
– “உண்மையாவா…”
– “ம்ம்ம்….. இந்தா 10ஆம் அண்டு Report இவ்வளவு நாள் பக்குவமா வைச்சிருந்தது உன்ன மாரி ஒருதனுக்கு காட்ட தான். இத நீயே வைச்சுக்கோ…”

இன்னும் 14 வருடங்கள் களித்து சமீரவும் கதை சொல்லி போய் எங்கேயோ ஒரு விடுதியில் Intern Medical Officer ஆக இருக்கலாம்.

4.கதை சொல்லி 6ம் கட்டில் Dengue pt க்கு Urine output குறைஞ்சதைப் பற்றி யோசித்தவாறு இருந்தான்….

முற்றும்.

பிற் குறிப்பு:-

– ஒரு NAC Vial இந்த விலை 17000. ஒரு Panadol Poisoning க்கு 150000-200000 வரை அரசு வைத்தியசாலையில் செலவிடப்படுகின்றது. இதனால் சில உயிர் காக்கும் மருந்துகளான Asprine, Enoxaprine சில Antibiotics முடிவடையும் போது அதனை வாங்க வைத்தியசாலையில் போதிய பணம் இல்லாமல் போகின்றது.

– தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. எங்கள் முட்டாள் தனங்களால் எம் அன்புக்குரியவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கின்றோம்.

டிஷாந்த் சிவகுமாரன்

டிஷாந்த் சிவகுமாரன்

(Visited 50 times, 1 visits today)