சிறந்த இயற்கை ஆர்வலராகவும் புகைப்படக்கலைஞராகவும் எழுத்தாளராகவும் எம்மிடையே அறிமுகமாகியிருக்கின்ற கீதா மதிவாணன் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவரானாலும் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். தமிழ் எழுத்துப்பரப்பில் மொழிபெயர்ப்பு எழுத்தாளராக இனங்காணப்பட்ட இவரது சிறுகதைகள் பல சஞ்சிகைகளில் வெளியாகி உள்ளன. ஹென்றி லாசன் எழுதிய அவுஸ்திரேலியாவின் காடுறை சிறுகதைகள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அண்மையில் நூலுருப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடுவின் கலைக்கூடம் பகுதிக்கு நாம் கீதா மதிவாணனிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் பரிந்துரை செய்த புகைப்படங்கள் உங்களுக்காக
நடு குழுமம்
000000000000000000000000000