வணக்கம் வாசகர்களே,
ஒருவருக்கு சந்தர்ப்பம் மட்டும் கொடுப்பதால் மட்டும் அவர் பிரபல்யம் அடைவதில்லை. சந்தர்ப்பம் என்பது ஒரு தளமாக மட்டுமே இருக்க முடியும். அந்த தளத்தை ஒரு அடிப்படையாகக் கொண்டு தேடுதலும், வேட்கையும் முயற்சியும் இருந்தாலே அவர் பிரபல்யம் அடையமுடியும். அத்துடன் வித்தியாசமான நுட்பங்களைக் கைஆள்வதன் மூலம் தமது இருப்பைத் தக்கவைக்கவும் முடியும். அந்தவகையில் எம்மால் புலம்பெயர் எழுத்துப் பரப்பிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பிருந்தாஜினி பிரபாகரன் தாயகத்தின் இளம் வயதில் பிரபல்ய ஓவியர்களில் ஒருவராக வளர்த்துள்ளார். இவரது தூரிகை மொழி தனித்துவமானது. சமூகம் சார்ந்த தனது பார்வையை தனது ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் இவரது செயற்பாடு கவனத்துக்குரியது. அதேவேளையில் இலக்கியம் சார்ந்த எழுத்தாளுமைகளை தனது ‘தனிநபர் ஓவியங்கள்’ மூலம் முன்நிலைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஆளுமைகள் தொடர்பாக இவரது தனிநபர் ஓவியங்கள் வாசகர்களுக்காக ………….நன்றி .
நடு குழுமம்
00000000000000000000000