தாயகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்தாஜினி பிரபாகரன். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் கலைக்கல்லுரியில் ஓவியத்துறையில் பட்டதாரியாகிப் பின்னர் அதே கல்லுரியில் இப்பொழுது விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். இவரது ஓவியங்கள் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரது ஓவியங்கள் இந்தியாவில் இடம்பெறும் ஓவியக்கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. நாம் நடுவுக்காக இவரது ஓவியங்களைத் தருமாறு அணுகியபொழுது அவர் நடு வாசகர்களுக்காகப் பரிந்துரை செய்த ஓவியங்கள் சில ………..
நடு குழுமம்
00000000000000
One thought on “கலைக்கூடம்-ஓவியம்-பிருந்தாஜினி பிரபாகரன்”
பிள்ளை பிருந்தாஜினி….
பழைய றங்குப்பெட்டியெல்லாம் கொட்டிக் கிளறித் தேடிற மாதிரித், தங்கச்சி! உம்மடை ஓவியங்களெல்லாம் ஒவ்வொண்டாய்ப் பாத்தன். நல்லாயிருக்கு. நானொரு சாதாரண சனம் கண்டீரோ. பெரிய மோனாலீசா ஓவியனெல்லாம் கிடையாது.
அது சரி.நல்லாயிருக்கு எண்டு எல்லாரும் சொல்லிறது இருக்கட்டும்.
நான் உமக்கு சொல்ல வாறதென்னெண்டாப் பிள்ளை, ஏன் ஒரேயடியாய் காவிக் கலருகளையே பயன்படுத்திறீர்? பச்சை,மென்பச்சை கலருகளையும் பாவிச்சால் என்ன? இப்ப பாரும், எங்கடை ஒரு வீதியையோ, குளத்தையோ கீறினா அதிலை பச்சை கட்டாயம் இருக்கும். வானத்திலை நிண்டு கீழை பாத்தால் எங்கடை நாடு பச்சையாத் தானிருக்கும். இல்லையோ! காவி நிறத்தைப் பாக்கேக்கை பாலைவன நிலத்தின்ரை உணர்வு வருகுது. திரும்பவும் சொல்லிறன். ஒரு பொதுசனத்தின்ரை கருத்து தான் இது. ஆனா சனத்திற்காக தான் கலையே. இல்லையோ! ஓமோ!
அப்ப பொது சனத்தின்ரை கருத்தும் முக்கியம் பாரும்.
பிறகு, உம்மட்டை நல்ல திறமை இருக்கு. எங்களிட்டை, ஓவியர்கள் குறைவு பாரும். நீர் உம்மை மாதிரி பத்துப் பேரை உருவாக்கிப் போடோணும். அது தான் வெற்றி.
அதோடை ஒரு முக்கியமான விசயம், எங்கடை தொன்மங்களை நீர் ஓவியமாக்கவேணும். அழிஞ்சு கொண்டு போற அடையாளங்களை ஓவியங்களாலை அடையாளப்படுத்த வேணும். உம்மாலை முடியும். மட்டக்களப்பெண்டா பாருமன், கல்லடிப் பாலம், வெளிச்ச வீடு, வாவி, கோட்டை,உன்னிச்சைக் குளம், கொக்கட்டிச் சோலைக் கோயில் இப்பிடியான இடங்களை ஓவியங்களாக்க வேணும். அதுகள் காலம் காலமா நிலைத்து நிற்கும். அதன் வழி நீரும் வரலாற்றிலை நிலைத்திருப்பீர்.
அப்பிடியே தமிழுக்குரிய தனிச்சிறப்புக்கள், பெருமைகள் எல்லாத்தையும் ஓவியமாக்கோணும். ஓவியம் எண்டதுக்கு அப்பாலையும் எங்கள் வாழ்வை ஆவணப்படுத்திற வேலை இது. ஓவியங்கள் நிறம்ப விசயங்களை சத்தம் போடாமல் பேசும் கண்டீரோ. இப்பிடி, எங்கடை அழிஞ்சு போற பல விசயங்களை ஓவயங்களாக்கோணும். அருவி வெட்டிறது, ஆட்டுக்கல்லை உழுந்தாட்டிறது, சூடடிக்கிறது, துலா மிதிக்கிறது, எண்டு இருபது முப்பத்து வருசங்களுக்கு முன்னுக்கு இருந்த விசயங்களையே, இண்டைக்கு காணக் கிடைக்குதில்லை.
கீறும். கீறும். நேரம் கிடைக்கேக்கை ஒவ்வொண்டாய் எழுதி வைச்சு எழுதி வைச்சுக் கீறிச் சேரும். ஓவியன் அவன் வாழும் காலத்தின் கண்ணாடி. அவன் வழியாக அந்தக் காலத்தின் காட்சிகளை எதிர்காலம் கண்டு கொள்ளும் எண்டு எங்கையோ வாசிச்ச மாதிரிக் கிடக்கு. உம்மளிட்டை படிக்கிற பிள்ளையளையும், இப்பிடி எங்கடை வாழ்க்கையை கீற வழிகாட்டும். இண்டைக்கு, சாதாரணமா இருக்கிற எங்கடை வாழ்க்கை காட்சியளை, இன்னும் ஐம்பது வருசத்துக்குப் பிறகு பாக்க பெருமூச்சுத் தான் வரும். அப்பிடியான ஓவியங்கள்ளை தான், நாளைக்கு எங்கடை பேரப்பிள்ளையள் எங்களை கற்பனை பண்ணிப் பாக்குங்கள் கண்டீரோ!
கீறும். கீறும். விடாதையும் பிள்ளை. வாழ்த்துக்கள்.
#உழவாரப்_பொன்னையா#