பொறுப்பு துறத்தல்
பெரும் ஆடு
வேள்விக்கெண்டு வெள்ளையம்மாள்
வளத்த ஆடு
செவ்வரத்தம்பூவில
மாலை போட்டு
மலை நெடுக இழுத்து வந்து
அய்யனார் காலடில
கட்டிப்போட்டாள்
பித்தளை குடத்தில
தண்ணிநிறைச்சு
மஞ்சளும் , வேப்பங்குழையும்
கலந்து
தலைக்கு ஊத்த ,
விபரீதம்
தெரியாம ஒரு சிலிப்பு சிலுப்பிச்சி
அகண்ட நெஞ்செல்லாம் சந்தனம்
தடவி
அருவாள் முனையில எலுமிச்சை
குத்தி
நெடுஞ்சாண் நிழலொன்று
பக்கத்தில வந்து நிக்க
பாவம் !
ஆதரவெண்டு நினைச்சிருக்கும்
ஒரே பொடில தலை துண்டாக
கழுத்து நெரிச்சு ரத்தமெடுத்து
சாமி காலெல்லாம் பூசி விட்டு
” நீதான்யா என் குடும்பத்தை
காப்பதோணும் ”
எண்டு உருகி நிண்டாள்
வெள்ளையம்மாள்
விழுந்த தலை அய்யனாரை
முறைக்க
ஆட்டு மூஞ்சில முழிக்க
கூச்சப்பட்டு
மீசை தொங்கி நின்னாரு
அய்யனாரு
சிந்துஜன் நமஷி-இலங்கை