நிகழ்வுகள்:
0000000000000000000000000
0000000000000000000000000
000000000000000000000000000
0000000000000000000000000
00000000000000000000000000
00000000000000000000000000
00000000000000000000000000
சஞ்சிகைகள் :
0000000000000000000000000
0000000000000000000000000
நிலங்களின் எழுத்துகள்
01 நூல் பற்றிய குறிப்பு :
பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை சம்பூர் வதனரூபனின் இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன.
நூலின் பெயர் : அடையாளமற்றிருத்தல்
ஆசிரியர் : சாம்பூர் வதனரூபன்
பகுப்பு : கவிதைகள்
வெளியீடு : வடலி பதிப்பகம்
விலை : 70 IRS
தொடர்பு : வடலி பதிப்பகம்/ சாம்பூர் வதனரூபன்
00000000000000000000000
02 நூல் பற்றிய குறிப்பு :
இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்குறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெருங் கருணையை தன்னோடு எடுத்துச் செல்லவிரும்புகின்றன அவரது கவிதைகள்.
நூலின் பெயர் : அபராதி
ஆசிரியர் : பஹீமா ஜஹான்
பகுப்பு : கவிதைகள்
வெளியீடு : வடலி பதிப்பகம்
விலை : 50 IRS
தொடர்பு : வடலி பதிப்பகம்/ பஹீமா ஜஹான்
00000000000000000000000
03 நூல் பற்றிய குறிப்பு :
2007 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து தன் 7 வயது மகனின் முன்னால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட, கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஷ் சுதாகரின் படைப்புகள் விமர்சனங்கள் அடங்கிய முழுத் தொகுதி. தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன? தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய் எஸ்போஸ் தொடர்ந்து அதிகாரத்தை வெறுப்பவராகவும் கேள்வி கேட்பவராகவும் தனது பிரதிகளில் உழன்றிருக்கின்றார். இதற்காய் தான் ஒரு நாள் தண்டிக்கப்படலாம் எனும் அச்சமும் பதைபதைப்பும் இருப்பினும் ‘என்னைப் பேச விடுங்கள்‘ என்பதாயே அவரது குரல் ஒலித்திருக்கிறது.
நூலின் பெயர் : எஸ்.போஸ்.படைப்புகள்
ஆசிரியர் : கருணாகரன்,ப.தயாளன்,சித்தாந்தன்
பகுப்பு : எஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும்,கவிதைகள்,கட்டுரைகள்,பேட்டிகள்,ஆசிரியர் தலையங்கங்கள்,விமர்சனங்கள்,தொகுப்பு
வெளியீடு : வடலி பதிப்பகம்
விலை : 200 IRS
தொடர்பு : வடலி பதிப்பகம் / கருணாகரன்,ப.தயாளன்,சித்தாந்தன்
0000000000000000000000
04 நூல் பற்றிய குறிப்பு :
நூலின் பெயர் : பல்லிகளில்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்
ஆசிரியர் : எஸ்.நளீம்
பகுப்பு : கவிதைகள்
வெளியீடு : மைநா பதிப்பகம்
விலை : 300 LKR
தொடர்பு : மைநா பதிப்பகம் / நளீம்
0000000000000000000000
நூல் பற்றிய குறிப்பு :
0000000000000000000000000000000000
நூலின் பெயர் : தேன்மொழி
ஆசிரியர் : தில்லைநாதன் கோபிநாத்/கலாமணி பரணீதரன்/நடராசா பிரபாகர்
பகுப்பு : சஞ்சிகைகளின் தொகுப்பு
வெளியீடு : ஜீவநதி பதிப்பகம் / நூலகம்
விலை : 300 LKR
தொடர்பு : ஜீவநதி பதிப்பகம்
0000000000000000000000000
06 நூல் பற்றிய குறிப்பு :
விபரம் இல்லை
000000000000000000000
நூலின் பெயர் : யாழ்ப்பாணத்து நினைவுகள்
ஆசிரியர் : வேதநாயகம் தபேந்திரன்
பகுப்பு : கட்டுரைகள்
வெளியீடு : சிவகாமி பதிப்பகம்
விலை : 390 LKR
தொடர்பு : சிவகாமி பதிப்பகம் /வேதநாயகம் தபேந்திரன்