கவிதை-லலிதகோபன்

 

லலிதகோபன்

ஒரு துயரினை
பகிர்ந்து கொள்கிறோம்
இரு வேறு நிலங்களில் ……
இது உனக்கான கோடையாயும்
எனக்கான மாரியாயும் இருக்கலாம் ….

ஆனாலும் இருளின் வேர்கள்
ஆழப்புதைத்திருக்கும்
சூரியன் பொது…..

கருமையினை சூல் கொண்ட
மழை இரு துளிகளை
ஈந்து செல்கிறது ….
உனக்கான அந்தகாரம்
எனக்கான தனிமை ……

வேலிகளால் பிளவுற்றிருக்கும்
நிலங்களை பேரலைகளால்
பிரித்து இரு வேறு தீவுகளாக்கும்
தீர்க்கதரிசனங்களினூடே
பாம்பென நெளிந்து செல்லும்
நிகழ் கணங்கள் ……

லலிதகோபன்-இலங்கை

லலிதகோபன்

 358 total views,  1 views today

(Visited 58 times, 1 visits today)