நிலங்களின் எழுத்துகள்-நடு குழுமம்

வெளியாகிய சஞ்சிகைகள் , காணக்கிடைக்காத சஞ்சிகைகள் ,மற்றும் நிகழ்வுகள்

00000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

90 படைப்பாளிகளால் 1950க்கு முன் எழுதப்பட்ட 178கதைகளைத் தாங்கி இத்தொகுப்புத் தொகுக்கப்பட்டுள்ளது.

நூலின் பெயர் : ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம்

ஆசிரியர் : சிறிகுமரன், ராஜேஸ் கண்ணன்,கு.றஜிவன்,சி ரமேஸ்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எவகிறீன் பதிப்பகம்

விலை : இலவசம்

தொடர்பு : யாழ்ப்பாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு /எவகிறீன் பதிப்பகம்

00000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

யுத்தம் ஒன்றே வாழ்க்கையென்றான பின் மரணம் ஒன்று மட்டுமே நிச்சயமானதாகி விடுகிறது. ஏனெனில் உயிர்களால் ஆடப்படும் பகடையாட்டமது. விதிகளும், நியாயங்களுமற்று ஆடப்படும் அந்த ஆட்டத்தில் தப்பித்தவர்கள் காலம் தோறும் தங்கள் கதைகளை வரலாற்றில் எழுதி வைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

யுத்தத்தை மட்டுமே கடந்த முப்பது வருட வாழ்க்கையாக கொண்ட ஈழத்தமிழர்களின் இலக்கியக் குரல்களில் ஒன்று கருணைரவியினது. வாழப்படாத வாழ்க்கை பற்றிய, வாழ்வுடன் மரணமாடிய குரூர விளையாட்டுப் பற்றிய, கைவிட்டுப் போன கனவுகள் பற்றிய நினைவுகள் இந்தக் கதைகள். குருதியினாலும் கண்ணீராலும் ஊறியிருக்கும் தனது கடந்த காலத்தின் பாதையில் இந்த கதைகளின் வழி நம்மையும் அழைத்துச் செல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் உப்பேறிய கிராமமொன்றில் பிறந்த இவரது கதைகளெங்கும் வெம்மையும், உப்பின் வீச்சமும், நேராகவும் கிடையாகவும் எல்லைகளற்று விரிந்து கிடக்கும் வீதிகளின் கானல்வீச்சமும் நமது முகத்திலறைந்தபடியேயிருக்கின்றன.

நூலின் பெயர் : கடவுளின் மரணம்

ஆசிரியர் : கருணை ரவி

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : வடலி

விலை : 80 இந்திய ரூபாய்கள் ( IRS )

தொடர்பு : வடலி

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடு, அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழு கதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல, எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கைமட்டுமல்ல, இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது. இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராக – எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக தன்னை வெளிப்படுத்துகிறார்.

நூலின் பெயர் : சேகுவேரா இருந்த வீடு

ஆசிரியர் : யோ. கர்ணன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு :  வடலி

விலை : 80 இந்திய ரூபாய்கள் ( IRS )

தொடர்பு : வடலி

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : தோற்றுப்போனவளின் வாக்குமூலம்

ஆசிரியர் : அலெக்ஸ் பரந்தாமன்

பகுப்பு :  சிறுகதைகள்

வெளியீடு : ஜீவநதி

விலை : 200 இலங்கை ரூபாய்கள் ( LKR )

தொடர்பு :  ஜீவநதி

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : சிந்தனைத்திடரில் சிதறிய துகள்கள்

ஆசிரியர் : கண்ணன்

பகுப்பு : கட்டுரைகள்

வெளியீடு : விஜே பிரிண்டேர்ஸ்

விலை : 300 இலங்கை ரூபாய்கள் ( LKR )

தொடர்பு : விஜே பிரிண்டேர்ஸ்

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : கருப்பு வானம்

ஆசிரியர் : நெடுந்தீவு முகிலன்

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : நீர் வெளியீடு

விலை : 220 இலங்கை ரூபாய்கள் ( LKR )

தொடர்பு : நீர் வெளியீடு

 

 

 

(Visited 155 times, 1 visits today)