ஒரு குழந்தைகளற்ற தம்பதிகள் தங்கள் 45 வது வருட கல்யாண நாளை கொண்டாடும் திட்டத்தில் உள்ளனர். அதற்கான வேலையில் மும்முரமாக இருக்குகையில்; ஜெப்னுக்கு, 50 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த தனது காதலியின் உடல் சுவிஸ் மலைகளில் கிடைத்தாக தகவல் வருகிறது.
வயதான கணவர் காதலியில் நினைவால் வாட ஆரம்பித்து விடுவார். தன்னுடன் இருந்து தனக்கு பணிவிடை புரியும் தன் மனைவியை மறந்து காதலியை போய் பார்க்க வேண்டும், என காதலி நினைவில் ஆழ்ந்து விடுகிறார். அவரை திருமணம் முடித்திருப்பேன் என்று வரை மனைவியிடம் கதைத்துக்கொண்டு இருப்பார். அதன் பின்னுள்ள மனைவியில் மனஉளைச்சிலுள்ள அந்த 6 நாட்களை பற்றியது தான் கதை.
பெரியவர் வீட்டிலே முடங்கி கிடக்க, காதலி நினைவாகவே இருக்கும் கணவரை ஆறுதல் படுத்த கதைகள் கேட்ட மனைவி, ஒரு கட்டத்தில் காதலி பெயரையே சொல்லாதீர்கள் என சொல்லி விடுகிறார். கணவரின் அன்பை இழக்கிறோம் என்ற இயலாமையில் உருவான பொறாமையும் மனைவியை பீடிக்க ஆரம்பிக்கிறது.
இருந்தாலும் வயோதிகத்தால் மலை ஏற இயலாது என சுவிஸ் மலைக்கு போவதை தடுத்த மனைவி, கணவர் மகிழ்ச்சிக்காக சுவிஸ் பயணத்திற்கு உதவ முன் வருகிறார்.
ஜெப் தன் மனைவியின் மனநிலையை புரிந்து, தன் தவறை உணர்ந்து பழைய படியும் காதலியை மறந்து மனைவிக்கு காலை காப்பி இட்டு தருகிறார், நாயை அழைத்து நடைபயணம் ஆரம்பிக்கிறார். முதலில் தங்கள் திருமண நாளை கொண்டாட மனதில்லாது இருந்தவர், பின்பு விழாவை சிறப்பாக கொண்டாடியதுடன் தன் மனைவியின் தியாகம், நட்பை, அன்பை பாராட்டி ஒரு உரையும் நிகழ்த்துகிறார்.
நடனம் முடியும் தருவாயில் இருவரும் தங்கள் வாழ்க்கை வெற்றி பெற்றதாக கையை உயர்த்த; கேய்ட் ஒரு கையை இறக்கி விடுகிறார். கணவரின் காதலி மேலுள்ள அதீத காதலால் அரை நூற்றாண்டு வாழ்ந்தும், திருமண பந்ததிற்குள் இருந்த ஆழமின்மை, மனைவியின் பாசத்தை புரக்கணித்தது எல்லாம் நினைவிற்கு வர கேய்ட் மனம் ஒரு வகையான வருத்தம், வாழ்க்கையின் நிலையாமைக்குள் இட்டு செல்கிறது.
முதிர்ந்த தம்பதிகளின் வாழ்க்கையில் இருந்த , பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, கரிசனை, அவர்களுக்குள் இருக்கும் காதல், ஒரு நொடியில் எழுந்த அற்ப மனதால் எழுந்த பிரிவு, பெண்களால் திருமணம் என்ற பந்தத்தில் கணவர்களால் எதிர்கொள்ளும் நம்பிக்கை துரோகத்தை ஏற்கவும், மறக்கவும் இயலாது துன்புறுவதை ஆழமான கருத்துடன் எளிய நடையில் எடுத்துள்ளார்கள்.
திருமண பந்ததிற்குள் இணைகளுக்குள் இருக்க வேண்டிய நம்பிக்கத்தன்மை, நினைவால் கூட இறந்தவர்வர்களாக இருந்தாலும் தம்பதி உறவிற்குள் கொண்டு வராது இருக்க வேண்டிய தேவையை பற்றியும் குறிப்பிடும் திரைப்படம் இது.
இது போன்று நமது தமிழ் இயக்குனர்களும் முதிர் வயது மனிதர்களின் உணர்வுகளையும் துல்லியமாக உணரக்கூடிய மெல்லிய அன்பை போதிக்கும் படங்கள் எடுப்பது நமது சமூகத்திற்கு தேவை.
நமது சமூக துர்பாக்கியம் ஆங்கிலேயர்கள் 70 வயதுக்கும் மேலுள்ளவர்களின் அழகான காதலை மையமாக வைத்து கதை எடுக்குகையில் இங்கு 60 வயது முதியவர்களை கருணை கொலை செய்வதை பற்றி படம் எடுத்து மிரட்டுகின்றனர்.
2016ல் சிறந்த நடிப்பிற்கு ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் ’45 Years’ என்பது சிறப்பாகும்.
ஆலா-இந்தியா
One thought on “70 வயதுக்கும் மேலுள்ளவர்களின் அழகான காதலை மையமாக வைத்து பின்னிய 45 Years -சினிமா விமர்சனம்-ஆலா”
விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது. பாரதிராஜா அந்திமந்தாரை என்றொரு படம் எடுத்திருக்கின்றார். வேறும் பலர் எடுத்திருக்கலாம். அது சரி 60 வயது முதியவர்களைக் கருணைக்கொலை செய்வது பற்றி படம் எடுத்து நம்மவர்கள் மிரட்டுகின்றார்கள் எனக் கூறியிருக்கின்றாரே, அது என்ன படம் என யாராவது சொல்வீர்களா?